சொந்த வீடு அமையவில்லையே என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், சொந்த வீடு வாங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், எத்தவையோ பரிகாரம் செய்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை என்கிறவர்களும், ஒரே ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் சொந்த வீடு கனவு நனவாகும். இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
வீடு வாங்குவதற்கான பரிகாரம் :
சொந்த வீடு வாங்க வேண்டும், மாதா மாதம் வாடகை தரும் பிரச்சனை அடிக்கடி வீடு மாறும் பிரச்சனை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே சொந்த வீடு கனவு எளிதில் நிறைவேறும். பெரும்பாலானவர்கள் அதற்காக பல காலம் போராட வேண்டி உள்ளது. இப்படி சொந்த வீடு கனவு நிறைவேற வேண்டும் என நினைப்பவர்கள் குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாலே போதும்.
குபேரர் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படுபவர். அதனால் வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் குபேரரின் அருளை பெறுவது அவசியமாகும். அதற்கு விரைவில் வீடு வாங்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வர வேண்டும்.
குபேர மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை குபேராய ஸ்ரீம் ஓம் நமஹ"
இந்த மந்திரத்தை தொடர்ந்து 41 நாட்கள் சொல்லி வர வேண்டும். இந்த மந்திரத்தை ஆண், பெண் யார் வேண்டுமானாலும், அனைத்து நாட்களிலும் சொல்லலாம். வியாழக்கிழமையில் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல துவங்க வேண்டும். இது குபேரரை மட்டுமல்ல லட்சுமி தேவியையும் போற்றும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகும். இந்த மந்திரத்தை நம்பிக்கையோடு சொல்லி வந்தால் உங்களின் சொந்த வீடு கனவு நிச்சயம் கைகூடும்.
குபேரர் வழிபாடு :
அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்து விட்டு, முதலில் விநாயகரையும், பிறகு சூரிய பகவானையும் வணங்கி விட்டு சொல்ல வேண்டும். தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் கிழக்கு முகம் பார்த்து, சுத்தமாக பசு நெய் கொண்டு ஒற்றை ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தை முழுவதுமாக சொல்லி முடித்த பிறகே தீபத்தை குளிர செய்ய வேண்டும்.
முடிந்தால் ஏதாவது ஒரு செடியை நட்டு வைத்தும் இந்த மந்திரத்தை சொல்ல துவங்கலாம். ஒரு செடி நடுவது என்பது எத்தனையோ உயிரினங்கள் வசிப்பதற்கும், இளைப்பாருவதற்கும் நீங்கள் வீடு அமைத்து கொடுப்பதற்கு சமம். வியாழக்கிழமையில் காலை அல்லது மாலை 6 மணிக்கு இந்த மந்திரத்தை சொல்வது மிகவும் விசேஷமானதாகும். அதிலும் காலை 6 முதல் 7 வரையிலான நேரத்தில் விளக்கேற்றி வைத்து இந்த குபேர மந்திரத்தை சொல்லது இரட்டிப்பு பலனை கொடுக்கும்.