சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் உடனே செய்யவேண்டிய 5 விஷயங்கள்!


சொத்து தொடர்பான ஆவணங்களின் நகலைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

உங்களிடம் உள்ள சொத்துக்களை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ நினைத்தால் அதற்கான பத்திரம் தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. அசல் ஆவணங்கள் வழங்கப்படாவிட்டால், சொத்து தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஏனெனில் வங்கிகள் முதல் தனியார் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வரை அனைத்திற்குமே கடன், அடமானம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தேவை.

எனவே சொத்து சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். எதிர்பாராத வகையில் திருட்டு அல்லது தொலைந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டால், சொத்து தொடர்பான ஆவணங்களின் நகலைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்…

1. எஃப்ஐஆர் பதிவு செய்தல்:

சொத்து தொடர்பான முக்கிய ஆவணம் அல்லது பத்திரங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர்-யைப் பதிவு செய்ய வேண்டும். எப்ஐஆரில் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக குறிப்பிட வேண்டும். இந்த எப்ஐஆரின் நகல் உரிமையாளரால் எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த உதவும்.

2. செய்தித்தாள் விளம்பரம்:

ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாள்களில் சொத்தின் விவரங்கள், இழந்த ஆவணங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்களை யாராவது கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பற்றிய அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும்.

3. பகிர்வு சான்றிதழ்:

ஹவுசிங் சொசைட்டியால் ஒதுக்கப்பட்ட பங்குச் சான்றிதழ் தொலைந்து போனால், அதை மீண்டும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது எஃப்ஐஆர் நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். எனவே குறிப்பிட்ட சான்றிதழ் தொலைந்து போனால் மேலே சொன்னா இரண்டு விஷயங்களையும் உடனடியாக செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

4. அண்டர்டேக்கிங்:

சொத்து விவரங்கள், தொலைந்த ஆவணங்கள், எஃப்ஐஆர் நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பர அறிவிப்பின் நகல் ஆகியவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்.

5. நகல் பத்திர விண்ணப்பம்:

சொத்து பத்திரத்தின் நகல்களைப் பெற, சொத்துப் பதிவாளரிடம் பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நகல் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

- FIR நகல்

- செய்தித்தாள் விளம்பர அறிவிப்பின் நகல்

- வழங்கப்பட்ட பங்குச் சான்றிதழ்களின் நகல்

- நோட்டரி செய்யப்பட்ட அண்டர்டேக்கிங் சான்றிதழ்

குறிப்பு: சில மாநிலங்கள் மற்றும் நகரங்கலில் இதுபோன்ற சில புகார்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, எஃப்ஐஆர் பெறும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. எனவே காவல்நிலையம் செல்வதற்கு முன்பு உங்கள் பகுதியில் இதுபோன்ற வசதி உள்ளதா? என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

Previous Next

نموذج الاتصال