சாதாரண மனிதர்கள் முதல் முற்றும் துறந்த முனிவர்கள் ஆனாலும் வீடு (own house) வேண்டும் என்ற ஆசை உண்டு. உலக வாழ்க்கையில் ஈடுபடும் மனிதர்களுக்கு குடியிருக்க வீடு வேண்டும் என்றால், ஞானியர்கள் மற்றும் ஆன்மிகவாதிகளுக்கோ முக்தி என்னும் வீடு பேறு வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறி விடுவதில்லை.
எந்த கோவிலுக்கு போனால் சொந்த வீடு வாங்கலாம்?
சொந்த வீடு கனவு நிறைவேறுவதற்கே உரிய கோவிலுக்கு சென்று வழிபட்டாலும், அதற்குரிய மந்திரங்களை சொல்லி, அதற்கான தெய்வங்களை வழிபட்டாலும் நிச்சயம் தடைகள் அனைத்தும் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும். இதை பலரும் அனுபவ ரீதியாக கண்டுள்ளனர்.
சொந்த வீடு கனவு
தனக்கென ஒரு தனி வீடு வேண்டும், சிறியதாக இருந்தாலும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் சொந்த வீடு வாங்குவதற்கு மட்டுமல்ல, வாங்கிய வீட்டில் குடியிருப்பதற்கும் யோகம் வேண்டும் என்பார்கள். சொந்த வீடு யோகம் அமைவதற்கு தெய்வ அருள் நிச்சயம் தேவை.
சொந்த வீடு வாங்க வணங்க வேண்டிய தெய்வம் :
அப்படி சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு ஆசைபடுபவர்கள், நிலம், தோட்டம், வயல் போன்றவைகள் வாங்க முயற்சி செய்பவர்கள், நிலம் அல்லது மனை தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி தவிப்போர் வணங்க வேண்டிய தெய்வம், பூமா தேவி. பெருமாள் பல திருப்பெயர்களில் கோவில் கொண்டிருந்தாலும் அவருக்கு அருகில் நிச்சயம் பூதேவி, ஸ்ரீதேவி இருப்பார்கள். இவர்களில் பூதேவியை வழிபட்டாலும், அவரின் நாயகனாக விளங்கும் திருமாலை வழிபட்டாலும் பூமி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, யோகம் வந்து சேரும்.